“ஐநேரத் தொழுகை
அனுதினமும்
கடமை” என்றேன்-நீ
ஆகாரம் தேடுவதிலேயே
ஆர்வமாய் இருந்தாய்.
“உனக்குத் தொழுகை
நடத்துமுன்-நீ
தொழுதுகொள்” என்றேன்.
தொழில்செய்யவே
தொடர்ந்து நீ முயன்றாய்.
“மரணம் வரும்வரை
மட்டில்லா ஆசைகள்-உன்
இறைவன் நினைவைவிட்டு
அகற்றிவிட வேண்டா” என்றேன்.
காதில் வாங்காமல்
கவனமற்று இருந்தாய்!
“ஆறிலும்
அழிவு வரலாம்.
நூறிலும்
அழிவு வரலாம்.
ஆகவே அல்லாஹ்வை
ஆர்வமாய்த்தொழுதுகொள்!”
என்றேன்.
நீயோ
வீண்பேச்சு, கேளிக்கை
அரட்டையில் நாள்தோறும்-உன்
நாட்களைக் கழித்தாய்!
தொழு! தொழு! என்று
தொடர்ந்து நான்
சொன்னபோதும்
தொழாத நீயோ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்
தொடர்ந்து இரசிப்பதிலே
காலத்தைத் தொலைத்தாய்!
இதோ-உன்
உயிரைப் பறிக்கின்ற
வானவர் வந்துவிட்டாரே
இப்போது நீ
என்ன செய்யப்போகிறாய்?
-- hameedsice
my favourite !
We are the world !
We are the children !
We are the youths of the 21st Century !!!
We are the children !
We are the youths of the 21st Century !!!
Tuesday, January 18, 2011
Thursday, January 13, 2011
முன்னாள் சிநேகிதிகள்
போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்த பிறந்த நாளில்
இருக்கேனா... செத்தேனா?
எனத் தெரியவில்லை.
அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி
தனக்கே வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளின் புதிய கைபேசி எண்களும்
என்னிடம் இல்லை.
மூன்று வேளைகளும்
சாப்பிட்டாயா? என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிறபோதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
என் மகளைத் தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழி ஒருத்தி
அவள் திருமணத்துக்கே
என்னை அழைக்கவில்லை.
திருமணத்துக்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்
கோபித்துக்கொண்டேன்
அவளோ
'அவர் சரி, அத்தை - மாமாவிடம்
சிநேகிதன் ஒருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்.
இருந்தானில் இறந்துபோயிருந்தது
எங்கள் நட்பு!
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்த பிறந்த நாளில்
இருக்கேனா... செத்தேனா?
எனத் தெரியவில்லை.
அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி
தனக்கே வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளின் புதிய கைபேசி எண்களும்
என்னிடம் இல்லை.
மூன்று வேளைகளும்
சாப்பிட்டாயா? என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிறபோதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
என் மகளைத் தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழி ஒருத்தி
அவள் திருமணத்துக்கே
என்னை அழைக்கவில்லை.
திருமணத்துக்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்
கோபித்துக்கொண்டேன்
அவளோ
'அவர் சரி, அத்தை - மாமாவிடம்
சிநேகிதன் ஒருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்.
இருந்தானில் இறந்துபோயிருந்தது
எங்கள் நட்பு!
-- hameedsice
வாழ்த்துகள்
தலைத்த தைமகளுக்கு...
துளிர்த்த தமிழனின்
வியர்வைத் துளிகள் - வாழ்த்துகள்....!
-- hameedsice
துளிர்த்த தமிழனின்
வியர்வைத் துளிகள் - வாழ்த்துகள்....!
-- hameedsice
Wednesday, January 12, 2011
my favourite
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லாவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பவா மெல்லாம்
பரிதிமுன் பணியே போல;
நண்ணியே நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய் !
Subscribe to:
Posts (Atom)